பெற்ற மகள்களை கொளுத்திய தந்தை... மதியை மழுங்கடித்த மது போதை..!
கன்னியாகுமரி அருகே, மனைவி வீட்டிற்கு வர தாமதமானதால் குடிபோதையில் 2 பெண் குழந்தைகளை தீ வைத்து கொளுத்திவிட்டு எலெக்ட்ரீசியன் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் - அனிதா தம்பதியருக்கு 11-வயதில் தன்ஷிகா, 9-வயதில் சுஷ்மிகா என்ற இரு பெண் குழந்தைகள்2 பெண் குழந்தைகள் உள்ளனர். எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்த நாகராஜன் குடி போதைக்கு அடிமையானதால் குடும்ப வறுமையாலும் இரு குழந்தைகளையும் படிக்க வைக்கவும் வேண்டி மனைவி அனிதா அருகில் உள்ள பேக்கரி கடையில் வேலைக்கு சென்று வருகிறார். நேற்றிரவு திருமண நிகழ்வுக்காக பேக்கரியில் ஸ்வீட்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அனிதா வீட்டிற்கு வர தாமதமாகியுள்ளது.
குடிபோதையில் வீட்டுக்கு வந்த நாகராஜன், மனைவி வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் வீட்டை பூட்டி விட்டு கட்டிலுக்கு அடியில் தூங்கி கொண்டிருந்த தனது இரு குழந்தைகள் மீதும் பீரோவில் இருந்த புடவை மற்றும் ஆடைகளை தூக்கி போட்டு தீ வைத்து கொளுத்தியதோடு தானும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்
இந்த நிலையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்
அப்போது நாகராஜன் உடல் முழுவது கருகி உயிரிழந்த நிலையிலும் இரு குழந்தைகளும் உடல் கருகி உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டனர்
இதனையடுத்து உடனடியாக இரு குழந்தைகளையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தைகளை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இரு குழந்தைகளும் 80-சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் நாகராஜன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
குடி போதையில் தந்தை இரு குழந்தைகளை தீ வைத்து கொளுத்தி விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Comments