7 வயது மதிக்கத்தக்க சிறுவனையும் அழைத்துச்சென்று ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி..!

0 2449

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் 7 வயது மதிக்கத்தக்க சிறுவனையும் அழைத்துச்சென்று கொள்ளையர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

திருவூரில் கூட்டுறவு வங்கி ஏடிஎம் மையத்திற்கு சம்பவத்தன்று அதிகாலை 7 வயது மதிக்கத்தக்க சிறுவனுடன் சென்ற 3 கொள்ளையர்கள், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

இயந்திரத்தின் மூடியை மட்டுமே அவர்களால் உடைக்க முடிந்தது. பணம் உள்ள லாக்கரை உடைக்க முடியாததால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

காலை ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட வாடிக்கையாளர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஏ.டி.எம் மையத்தில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments