முகப்பு
ரூ 10 லட்சம் வரதட்சணைக்காக காதல் மனைவியை விரட்டிய “டெக் சூப்பர்ஸ்டார்” ஓட்டம்..! இந்த கொடுமை எல்லாம் செய்தாரா ?
Jul 06, 2025 01:40 AM
1583
“டெக் சூப்பர் ஸ்டார்” சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு.. ரூ 10 லட்சம் பணத்துக்காக மனைவியை தவிக்க விட்ட கொடுமை
எலக்ட்ரானிக் மார்க்கெட்டில் எந்த பொருள் வந்தாலும் அந்த பொருளை பற்றி முழுவிவரங்களையும் விவரித்து யூடியூப்பில் வீடியோ பதிவிட்டதால் பிரபலமான டெக் பாஸ் சுதர்சன் தான் வரதட்சனை கொடுமை வழக்கில் சிக்கி உள்ளார்..!
ஆரம்பத்தில் டெக் பாஸ் யூடியூப் சேனலில் இருந்த சுதர்சன், தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பிணக்கால் கட்டப்பையுடன் கிளம்பி டெக் சூப்பர் ஸ்டார் என்ற யூடியூப் சேனலை தொடங்கினார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே சுதர்சனுக்கும் அவரது காதல் மனைவி மருத்துவர் விமாலா தேவிக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இரு தரப்பும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை இந்த நிலையில் சுதர்சன் குடும்பத்தினரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பட்டியலிட்டி மருத்துவர் விமாலாதேவி , தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
மதுரையை ஒத்தக்கடையை சேர்ந்த வெள்ளாஞ்செட்டியர் சங்கத்தலைவர் சுந்தரராஜனின் மகன் டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன், மருத்துவரான விமாலாதேவியை தனியார் மருத்துவமனையில் வைத்து பார்த்து பேசி பழகி காதலித்ததாகவும், இருவரும் வேறு வேறு சாதி என்றாலும் இரு வீட்டு பெற்றோரும் அமர்ந்து பேசி திருமணம் முடிவு செய்ததாக கூறப்படுகின்றது. இருவருக்கும் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி தேனி நட்டாத்தி நாடார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சனையாக 30 சவரன் நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம், மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
திருமணத்திற்கு பின்னர் விமலாதேவி கர்ப்பமான நிலையில் டெக் பாஸ் யூடியூப் சேனலில் இருந்து டெக் சூப்பர் ஸ்டார் என்று புதிய யூடியூப் சேனல் தொடங்கிய சுதர்சன் புதிதாக வீடு ஒன்றை கட்டுவதற்கு தொடங்கியதாக கூறப்படுகின்றது. வீடுகட்ட கூடுதல் பணம் தேவைப்பட்டதால் மனைவி விமாலாதேவியிடம் இருந்த மொத்த நகைகளை கேட்டதாக கூறப்படுகின்றது. நகைகளை அனைத்தையும் கொடுத்தும் பத்தாது என்று விமலாதேவியிடம் தாய் வீட்டில் கூடுதலாக பணம் வாங்கி வரச் சொல்லி அவரது குடும்பத்தினர் மோசமாக பேசியதாக கூறப்படுகின்றது.
தொடர்ந்து விமாலாதேவியை கடுமையாக விமர்சித்ததோடு அவரை தாய் வீட்டுக்கும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது. விமலாதேவிக்கு குழந்தை பிறந்த பின்னர் அவரை பார்க்கவோ அவரை தனது வீட்டிற்கு கூட்டி வரவோ சுதர்சன் எந்த முயறசியும் செய்யவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விமலாதேவி குடும்பத்தினர் வீரபாண்டி கோவிலில் வைத்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
5 லட்சம் ரூபாய் தருவதாக பெண் வீட்டார் தெரிவித்ததாகவும், தங்களுக்கு கூடுதலாக 30 சவரன் நகையும் மொத்தமாக 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் வேண்டும் என்று நிபந்தனை விதித்த சுதர்சன் குடும்பத்தினர் , அவ்வளவு பணம் , நகை தங்களிடம் இல்லை என்றதும், கேட்ட நகை பணமில்லாமல் வீட்டிற்குள் வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதோடு, தன்னை குழந்தையோடு தவிக்க விட்டு சென்று விட்டதாக விமலாதேவி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கணவர் சுதர்சன், மாமியார் மாலதி, மாமனார் சுந்தரராஜன், நாத்தனார் சக்திபிரியா, அவரது கணவர் விக்னேஸ்வரன் ஆகிய 5 பேர் மீது வரதட்சனை கொடுமை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன் குடும்பத்துடன் தலைமறைவானதாக கூறப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu