தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை கடற்படை மீது வழிப்பறி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்த போது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய நிலையில், மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மீனவர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை ஆட்சியர் தெரிவித்தார்.
Comments