கனமழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 21 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்..!

0 2381

டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 21 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரும், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும் தண்ணீரில் சாய்ந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சாய்ந்த நெற்பயிர்களை இயந்திரம் மூலமாக அறுவடை செய்ய இயலாதென தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments