78 நாடுகளில் 18,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

உலகம் முழுவதும் 78 நாடுகளில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்புகளில் பெரும்பாலனவை ஐரோப்பாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், நோய் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாகவும், நெருங்கிய தொடர்பு மூலமாக மட்டுமே இந்நோய் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments