ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஹர்வான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் காணப்படாத ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
அப்பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி திடீரென ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதற்கு பாதுகாப்புப் படையினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் அந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
Comments