மீன் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய நல்ல பாம்பு... லாவகமாக மீட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்

0 3929

விழுப்புரம் மாவட்டம் வளத்தி அடுத்த தேவனூரில் மீன்பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய நல்ல பாம்பை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் பத்திரமாக மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

ஏரியில் மீன்பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த வலைக்குள் சிக்கி நகர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த நல்ல பாம்பை மீட்க அப்பகுதி மக்கள் யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படும் நிலையில், அவ்வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செல்வமணி, லாவகமாக வலையில் இருந்து பாம்பை மீட்டெடுத்தார்.

பின்னர், அந்த நல்ல பாம்பு அங்கிருந்த புதருக்குள் சென்றுவிட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments