கொச்சி - மங்களூரு இடையேயான குழாய் வழி எரிவாயுத் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

கொச்சி-மங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தேசம் வளர்ச்சியைடையும் வேகம் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
கொச்சி-மங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தேசம் வளர்ச்சியைடையும் வேகம் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
கெயில் நிறுவனம், கேரளத்தின் கொச்சி மற்றும் கர்நாடகத்தின் மங்களூரு இடையே 450 கிலோமீட்டர் நீளத்திற்கு இயற்கை எரிவாயு குழாயை, 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பதித்துள்ளது.
ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பை உருவாக்குவதற்கான மைல்கல் என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ள இந்த திட்டத்தை, காணொலியில் மோடி தொடங்கி வைத்தார். இது, கர்நாடகம், கேரளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் திட்டம் என குறிப்பிட்ட பிரதமர், இரு மாநிலங்களிலும் லட்சக் கணக்கானோரின் சிரமங்களை குறைத்து வாழ்வை எளிமையாக்கும் என்றார்.
Comments