தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு பின்னர் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு பின்னர் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பின்னர் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படுமென கூறப்பட்டுள்ளது.
வருகிற 28, 29 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வடக்கு, தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த இருநாட்களுக்கு மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசுக்கூடும் என்பதால் அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments