மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிய பெரம்பலூர்.. 10 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு

தமிழ்நாட்டில், புதிதாக 1,134 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், புதிதாக 1,134 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் 1,170 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பால் 12 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா உயிரிழப்பு இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. சென்னையில் 341 பேருக்கு, புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பெரம்பலூர், மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. 10 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 781 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments