தொலைதூர தமிழ் வழிக் கல்வி குறித்து பதிலளிக்க பல்கலைக்கழகங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தொலைதூர தமிழ் வழிக் கல்வி குறித்து பதிலளிக்க பல்கலைக்கழகங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தமிழ் வழி தொலைதூரக் கல்வி குறித்து பதிலளிக்க பல்கலைக்கழகங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சக்திராவ் என்பவர் தொடர்ந்த வழக்கில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு, பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்வழியில் தொலைதூரக்கல்வி வழங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
Comments