RECENT NEWS

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

Nov 17, 2025

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

விமான நிலையங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கிய FAA..! பணியாளர் பற்றாக்குறையால் குறைக்கப்பட்ட விமான இயக்கம்..

Nov 17, 2025

BIG STORIES

கோவை பங்களா வீட்டில் எஜமானியை குத்திக் கொன்றதாக ஓட்டுனர் சரண்..! சந்தேகம் எழுப்பும் உறவினர்கள்..

Oct 29, 2025 01:35 AM

729

கோவை பங்களா வீட்டில் எஜமானியை குத்திக் கொன்றதாக ஓட்டுனர் சரண்..! சந்தேகம் எழுப்பும் உறவினர்கள்..

கோவை பங்களா வீட்டில் எஜமானியை குத்திக் கொன்றதாக ஓட்டுனர் சரண்..!

கோவை பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரின் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஓட்டுனர் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது. சட்டையில் சிறு துளி ரத்தம் இல்லாமல் கொலை செய்தது எப்படி ? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்

கோவை அருகே மர்மமான முறையில் அதிமுக பிரமுகர் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் தான் இவை..!

கோவை துடியலூர் அருகே பன்னிமடையை அடுத்த தாளியூர் பகுதியில் குடியிருந்து வருபவர் முன்னாள் அதிமுக மாவட்ட கவுன்சிலரும், பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவருமான கவி சரவணகுமார். இவரது மனைவி 47 வயதான மகேஸ்வரி.

கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை சரியில்லாமல் இருந்ததால் கவி சரவணக்குமார் வடவள்ளி பகுதியில் உள்ள வீட்டில் தனியாக தங்கி இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் கவி சரவணக்குமார் தங்கி இருந்த வீட்டிற்கு சென்ற ஓட்டுனர் சுரேஷ், “எஜமானி மகேஸ்வரி அம்மாவை கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக” கூறி கதறி அழுததாகவும், அவர் சுரேஷை வடவள்ளி காவல் நிலையத்தில் ஒப்ப்டைத்ததாகவும் கூறப்படுகின்றது.

இதுகுறித்து கொலை சம்பவம் நடந்த பங்களா வீடு அமைந்துள்ள தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தடாகம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

கவி சரவணகுமாருக்கு 21 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ள நிலையில், கொலை நடந்த வீட்டை முற்றுகையிட்ட அவரது உறவினர்கள் மகேஸ்வரி கொலையில் மர்மம் இருப்பதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சரணடைந்த ஓட்டுநர் சுரேஷிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காலையில் குளித்து குங்கும பொட்டுடன் பவ்வியமாக அமர்ந்திருந்த சுரேஷின் வெள்ளை சட்டையில் ஒரு துளி ரத்தம் கூட இல்லாத்தால், அவர் கொலை செய்தாரா ? அல்லது வேறு யாராவது செய்த கொலைக்கு பழியை ஏற்றாரா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்னதாக கொலையாளி வீட்டில் உள்ள சிசிடிவி காமிராக்களை அனைத்தையும் ஆப் செய்து வைத்துள்ளதால், அந்த வீட்டை பற்றி நன்கு அறிந்த ஒருவர் தான் இந்த கொலை யை செய்திருக்க வேண்டும் என்ற போலீசார் ஓட்டுனர் சுரேஷ் தனி ஆளாக இந்த கொலை யை செய்தாரா ? அல்லது வேறு நபர்கள் உடந்தையாக இருந்தார்களா ? என்று விசாரித்து வருவதாக தெரிவித்தனர்

தடயங்களை சேகரித்து வருவதாகவும், முழுமையான விசாரணைக்கு பின்னரே இந்த கொலைக்காண முழு காரணமும் தெரியவரும் என்று தெரிவித்த போலீசார் பதட்டமின்றி கொலையாளியை காவல் நிலையம் அழைத்து வந்த கவி சரவணக்குமாரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தபால் நிலைய  பார்சலை திருடி தாய்க்கு சேலை  ‘கிப்ட்’ .. சீரியல் கொள்ளையன் கைது..! ஒரே இரவில் தொடர் கைவரிசை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies