RECENT NEWS

Dec 16, 2025

முகப்பு

ரிதன்யா வழக்கில் கணவரின் குடும்பத்திற்கு ஜாமீன் கிடைத்தது எப்படி? நீதிபதி சொன்னது என்ன? வெளியான பரபரப்பு தகவல்கள்..

Aug 23, 2025 01:52 PM

172

ரிதன்யா வழக்கில் கணவரின் குடும்பத்திற்கு  ஜாமீன் கிடைத்தது எப்படி? நீதிபதி சொன்னது என்ன? வெளியான பரபரப்பு தகவல்கள்..

ரிதன்யாவின் கணவர் குடும்பத்தாருக்கு ஜாமீன் ஏன்? நீதிபதி சொன்னது என்ன? பரபரப்பு தகவல்கள்

கடந்த ஜூன் மாதம், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார்.

அவர் இறப்பதற்கு முன்பாக கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார்.

இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் மூவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காவல்துறை தரப்பில், ரிதன்யாவின் ஆடியோ தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மனுதரார்கள் செல்வாக்கு மிக்க நபர்கள் என்பதால் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாகவும் ரிதன்யாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ரிதன்யாவின் கணவர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், "சுமார் இரண்டு மாதங்களாக மனுதாரர்கள் சிறையில் இருப்பதாகவும் ஏற்கனவே ஆர்.டி. ஒ மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளில் மனுதாரர்களுக்கு எதிரான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு பேசிய நீதிபதி ஜெயசந்திரன், ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினர் மூவருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்குவதாகவும், மூவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகை கொண்ட இரு நபர் ஜாமீன் உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை 10 மணி மாலை 5 மணிக்கு நேரில் ஆஜராகி கையொப்பம் இட வேண்டும். அவிநாசி நீதிமன்றத்தின் அனுமதியின்றி தமிழகத்தை விட்டு வெளியேற கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

அவிநாசி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். பாஸ்போர்ட் இல்லை என்றால் தங்களிடம் பாஸ்போர்ட் இல்லை என்பது தொடர்பான உத்தரவாதத்தினை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சாட்சிகள் மற்றும் ஆவணங்களை கலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

Dec 16, 2025

polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies