RECENT NEWS

தாறுமாறு தண்ணீர் லாரியால் அப்பாவி உயிர்கள் பலி..! கட்டி வைத்து தோலை உரித்தனர்..! மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..

முகப்பு

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்.. எங்கும் எதிரொலித்த அரோகரா முழக்கம்.. கோபுர தரிசனம் கண்டு சிலிர்த்த பக்தர்கள்..!

Jul 14, 2025 08:39 AM

73

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்.. எங்கும் எதிரொலித்த அரோகரா முழக்கம்.. கோபுர தரிசனம் கண்டு சிலிர்த்த பக்தர்கள்..!

திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவை அரோகரா முழுக்கமிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தமிழ்கடவுள் முருகப்பெருமான் தேவேந்திரன் மகள் தெய்வானையை மணந்த தலம் திருப்பரங்குன்றம் என புராணங்கள் கூறுகின்றன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்களால் முதல் படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றத்தில் கடந்த 10ஆம் தேதி முதலாம் கால யாகசாலை பூஜை 75 யாககுண்டங்களில் நடைபெற்றன.

இன்று அதிகாலையில் 8ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்த பின்னர் 75 யாக குண்டங்களின் முன்பாக வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காலை 5.30 மணிக்கு 7 நிலை ராஜகோபுரத்தின் மீதிருந்த 7 கலசங்களின் மீது ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டன. அப்போது கூடியிருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது.

இதனைத் தொடர்ந்து கோவர்த்தனாம்பிகை விமானம், விநாயகர், மூலவர் விமானத்தின் மீதிருந்த கலசங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்ற பின்னர் 25க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவை காண கோவில் முன்பு ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் மதுரையில் இருந்து மீனாட்சி சுந்தரரேஸ்வரர், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருப்பரங்குன்றத்திற்கு எழுந்தருளி அருள்பாலித்தனர்.

மூலவரை எளிதில் தரிசனம் செய்யும் வகையில் இரண்டு நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு பொது தரிசனம் மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்
பக்தர்கள் பொறுமையாக 48 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜையில் சாமி தரிசனம் செய்யலாம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு கோலாகலம்.. எங்கும் எதிரொலித்த அரோகரா முழக்கம்.. கோபுர தரிசனம் கண்டு சிலிர்த்த பக்தர்கள்..!


குடமுழுக்கு விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள பக்தர்களுக்கு ஆங்காங்கே உள்ள மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இந்தியாவுக்கு 25% வரி விதித்த டிரம்ப்.. 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை.. இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவில் சிக்கல்?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies