முகப்பு
பழனியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் கைது
Jun 19, 2025 01:56 AM
75
பழனியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி 3 ஆண்டுகளுக்குப் பின் இளைஞரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர் தடை செய்யப்பட்ட ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செயல்பட்டதாக கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை போலீஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் பழனிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை போலீசார் ராஜா முகமது விடம் விசாரணை மேற்கொண்டனர். அவரைக் கைது செய்து கோவை அழைத்துச் சென்றுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu