முகப்பு
"சென்னையே நம்மளுதான்".அஜய் வாண்டையார் கூட்டாளிகளோடு கைதானது ஏன்?.. கதறிய சின்னத்திரை நடிகை..!
Jun 02, 2025 12:27 PM
133
சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் 'Lord Of The Drinks' என்ற மதுபான கூடத்திற்கு கடந்த 22 ஆம் தேதியன்று ஈசிஆரில் தனியார் உணவகம் நடத்தி வரும் ராஜா, ஜானகிராமன், அதிமுக நிர்வாகி பிரசாத், தொழிலதிபர் கணேஷ்குமார் ஆகியோர் மது அருந்த சென்றுள்ளனர்.
அப்போது திடீரென பாட்டில்கள் கண்ணாடி மேஜைகள் உடையும் சத்தம் கேட்டு மது அருந்த வந்த சில பெண்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை செய்தபோது தனியார் ஹோட்டல் உரிமையாளர் ராஜா ரத்த காயங்களுடன் சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து புகார் அளித்த ராஜா, பக்கத்து இருக்கையில் மது அருந்தி கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பியின் மகன் செல்வபாரதியும் அவரது நண்பர்களும், 72 வயதான ஜானகிராமன் டான்ஸ் ஆடுவதை பார்த்து "கிழட்டு பசங்களுக்கு டான்ஸ் ஒரு கேடா" என கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ராஜா தட்டிக்கேட்டபோது செல்வபாரதி பீர் பாட்டிலால் தாக்கியதாவதும், கையில் 18 தையல் போடப்பட்டுள்ளதாகவும் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து செல்வபாரதி, அஸ்வின் உட்பட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மருத்துவமனையில் இருந்த ராஜாவை பார்க்க சென்ற முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி முன்னாள் செயலாளரும், அதிமுக நிர்வாகியும், நடிகருமான அஜய் வாண்டையார், பிரபல ரவுடி நாகேந்திர சேதுபதி என பாண்டவாஸ் அணியினர் ரத்தகாயங்களை பார்த்து ஆவேசம் அடைந்து "ரத்ததிற்கு ரத்தம் பழிவாங்க பழையபடி திரும்புவோம்" என பேசியதாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் நுண்ணறிவு பிரிவு போலீசார் உயர் அதிகாரிகளுக்கு வீடியோ ஆதாரத்தோடு அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
போலீசார் பாரில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பாரின் மேலாளர் வெங்கட்ராமனிடம் விசாரித்த போது ஜானகிராமன் வேண்டுமென்றே நான்கு ஐந்து முறைக்கு மேல் செல்வபாரதி மேல் விழுந்ததாகவும் அதனால் சண்டை உருவானதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து செல்வபாரதியை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
பார் மேனேஜர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக நிர்வாகி பிரசாத், தொழிலதிபர் கணேஷ்குமார் ஆகிய இருவரை மதுரையிலும், தனசேகரை வடபழனியிலும் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அஜய் வாண்டையார் , ரவுடி நாகேந்திர சேதுபதி (எ) சுனாமி சேதுபதி, ஆகிய இருவரை தனிப்படையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். கைதானவர்களின் மொபைல் போன்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது .
போலீசார் நடத்திய விசாரணையில் அஜய் வாண்டையார் மற்றும் ரவுடி நாகேந்திர சேதுபதி உள்ளிட்டோர் கூட்டாக சேர்ந்து 'பாண்டவாஸ் அணி' என்ற ஒரு குழுவை உருவாக்கி 'சென்னையே நம்மளுதான்' என்பது போல கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
கைதான தொழிலதிபர் கணேஷ்குமாரின் மனைவி சின்னத்திரை நடிகையுமான ரோஜா ஸ்ரீ, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் வெளியே நின்று போலீசார் தனது வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து சோதனை நடத்தி பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார். மேலும் தனது கணவர் குடிப்பழக்கம் இல்லாதவர் என்றும் இந்த தகராறு நடந்தபோது உடன் மட்டுமே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu