RECENT NEWS

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தடங்கலை ஏற்படுத்துகிறார்கள் - முதலமைச்சர் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

முகப்பு

பலாத்கார விவகாரம்; பிஷப்பை எதிர்த்து போராடிய கன்னியாஸ்திரி அனுபமா..! என்ன செய்கிறார் தெரியுமா?

May 29, 2025 03:22 PM

427

பலாத்கார விவகாரம்; பிஷப்பை எதிர்த்து போராடிய கன்னியாஸ்திரி அனுபமா..! என்ன செய்கிறார் தெரியுமா?

பிஷப்பை எதிர்த்து போராடிய கன்னியாஸ்திரி.. கன்னியாஸ்திரி அனுபமா என்ன செய்கிறார் தெரியுமா?

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காட்டில் கத்தோலிக்க சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் ஆசிரமம் உள்ளது. இது பஞ்சாபின் ஜலந்தர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டது. அந்த மறைமாவட்டத்தின் பிஷப்பாக பிராங்கோ முலக்கல் பதவி வகித்தார். இவர் 2014 முதல் 2016 வரை பதவியில் இருந்த காலக்கட்டத்தில் கேரளாவுக்கு பயணம் செய்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு, இவர் மீது கோட்டயம் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் 2018-ல் ஒரு புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், குருவிலங்காடு மடத்தில் வைத்து 2014 முதல் 2016 வரை 13 முறை பிஷப் பிராங்கோ முளய்க்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறியிருந்தார்.

ஆரம்பத்தில் புகார் கொடுத்தும் போலீஸ் தரப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, சபை தலைமைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறி சக கன்னியாஸ்திரிகள் தெருவில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தினர். அந்த போராட்டத்தில் முன்னிலையில் நின்றவர் கன்னியாஸ்திரி அனுபமா. இதனால் அனுபமா உள்ளிட்ட சில கன்னியாஸ்திரிகளை சபை நிர்வாகம் இடம் மாற்றம் செய்தது. ஆனாலும், போராட்டம் தீவிரமானதை அடுத்து பிஷப் பிராங்கோ முளய்க்கல் சபையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும் அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

அந்த வழக்கின்பேரில் 2018 செப்டம்பர் 21ஆம் தேதி பிஷப் பிராங்கோ முளய்க்கல் கைதுசெய்யப்பட்டர். பிஷப்புக்கு எதிராக பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா என்பவர் வாக்குமூலம் அளித்திருந்தார். அவர் 2018ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கில் கன்னியாஸ்திரிகள் உள்பட நூறுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்த்தப்பட்டது. மேலும் 105 நாட்கள் ரகசிய விசாரணையும் நடத்தப்பட்டது. கோட்டயம் அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வெளியானது. அதில், பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீதான குற்றத்திற்கு போதுமான ஆதாரம் இல்லை என கூறி பிஷப் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அரசு தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு மே மாதம் தனது பிஷப் பதவியை பிராங்கோ முளய்க்கல் ராஜிநாமா செய்தார். மேலும் பிராங்கோ முளய்க்கல் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கன்னியாஸ்திரிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், கன்னியாஸ்திரிகளின் போராட்டங்களுக்கு தலைமை வகித்த கன்னியாஸ்திரி அனுபமா சபையில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. ஜலந்தர் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கோட்டயம் குருவிலங்காட்டில் செயல்பட்டுவரும் கன்னியாஸ்திரி மடத்தில் இருந்து ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வெளியேறிய கன்னியாஸ்திரி அனுபமா, ஆலப்புழா பள்ளிப்புறத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி உள்ளார். எம்.எஸ்.டபிள்யூ படித்துள்ள அனுபமா, பள்ளிப்புறம் இன்போ பார்க்கில் உள்ள ஐ.டி கம்பெனியில் டேட்டா எண்ட்ரி வேலைக்கு சேர்ந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இதுகுறித்து அனுபமா நேரடியான எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அட கடவுளே... மனைவியின் கடைசி ஆசை... அஸ்தியை கரைக்க 
வந்தவருக்கு இப்படி ஆகவேண்டுமா?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies