RECENT NEWS

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

Jun 22, 2025

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

விஜய் பிறந்தநாளில் த.வெ.க பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட த.வெ.க நிர்வாகிகள் மீது தாக்குதல்

Jun 22, 2025

BIG STORIES

தோட்டத்து வீட்டுக் கொலை.. நகைக்கடை உரிமையாளர் போலீசில் சிக்கியது ஏன்..?.. ஏற்கனவே 5 சம்பவம் செய்தவர்கள்

May 20, 2025 12:56 AM

321

தோட்டத்து வீட்டுக் கொலை.. நகைக்கடை உரிமையாளர் போலீசில் சிக்கியது ஏன்..?.. ஏற்கனவே 5 சம்பவம் செய்தவர்கள்

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட தோட்டத்து வீடுகளில் நிகழ்ந்த கொடூர கொலை சம்பவங்களில் போலீசாரால் துப்புத்துலக்க முடியாமல் நீண்ட நாட்களாக தவிப்புக்குள்ளானார்கள். தற்போது இந்த வழக்கில் துப்புதுலக்கப்பட்டு நகைக்கடை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சேமலை கவுண்டன் பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி அவரது மனைவி அலமேலு அம்மாள் மகன் செந்தில்குமார் ஆகியோர் கடந்த 170 நாட்களுக்கு முன்பாக கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அழைத்து போலீசார் தீவிரமாக விசாரித்தும் இந்த வழக்கில் கொலையாளிகளை போலீசாரால் கைது செய்ய இயலவில்லை இந்த பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாக இதே பாணியில் ஒரு கொடூர கொலை சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நிகழ்ந்தது.

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த ராமசாமி - பாக்கியம்மாள் தம்பதியர் தங்களது தோட்டத்து வீட்டில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர்.

பாக்கியம்மாள் கழுத்தில் இருந்து தாலிக் கொடி, தங்க வளையல் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த இரு கொலை சம்பவங்களிலும் கைரேகை, செல்போன் சிக்னல் , சிசிடிவி காட்சிகள் எதுவும் கிடைக்காத நிலையில், குற்றவாளிகளை பிடிப்பதில் பெரும் சிரமம் இருந்து வந்தது.

சம்பவம் நடைபெற்ற நாளுக்கு முன்பும், பின்பும் என மூன்று நாட்கள் மாவட்டம் முழுவதும் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் பொது இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொலை நடந்த இரண்டு தோட்டமும் கீழ்பவானி வாய்க்கால் பகுதியை ஒட்டி அமைந்திருந்த காரணத்தினால் கொலையாளிகள் கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள வழி தடத்தை பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பல கிலோமீட்டர் தூரம் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அரச்சலூர் பாலம் அருகில் வாய்க்கால் தடம் வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தன்று மூன்று பேர் பஜாஜ் பிளாட்டினா இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

விசாரணையில் அவர்கள் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், மாதேஷ், அச்சியப்பன் என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

3 பேரிடம் நடத்திய விசாரணையில் சிவகிரி இரட்டை கொலை மட்டுமல்ல, சேமலை கவுண்டன் பாளையம் 3 பேர் கொலையையும் தாங்கள் தான் செய்ததாக ஒப்புக் கொண்டதாகவும், ஏற்கனவே 5 வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் , கடந்த 2015 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் சிறையில் இருந்ததாகவும் மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்தார்

இந்த இரு சம்பவங்களிலும் கொள்ளையர்களில் ஆச்சியப்பன் மட்டும் 15 நாட்களுக்கு முன் கூட்டியே தனியாக சென்று, தென்னந்தோப்பில் மட்டை கழிப்பது, மருந்து வைப்பது தேங்காய் பறித்து உரித்து கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்வது போல வீட்டில் உள்ளவர்களை நோட்டமிட்டு சென்று தகவல் கூறியுள்ளான்.

முன் கூட்டியே காவலுக்கு இருக்கும் நாய்க்கு உணவில் குருணை மருந்தை கலந்து வைத்து சாகடித்துள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து கரும்புக்காட்டிற்குள் பதுங்கி இருந்து , நள்ளிரவில் மின்சாரத்தை துண்டித்து, வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்ததாகவும், தங்களை காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக இரு சம்பவங்களிலும் 5 பேரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்ததாகவும் கொலையாளிகள் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகின்றது.

செந்தில்குமாரின் ஐ போனை அருகில் உள்ள கிணற்றுக்குள் வீசியதாக கொலையாளிகள் தெரிவித்ததால் அதனை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கீழ்பவானி வாய்க்காலில் வீசியதாக கொலையாளிகள் தெரிவித்ததால், தண்ணீரை அடைத்து விட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் ஒன்றை கைப்பற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ரமேஷ், மாதேஷ், ஆச்சியப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் , கொள்ளையடித்த நகைகளை வாங்கி உருக்கி விற்றுக் கொடுக்க துணையாக இருந்த காரணத்தினால், அரச்சலூர் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரனை இந்த வழக்கில் 4 வதாக கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 4- பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

காதல் மனைவியை பிரிந்த இளைஞர் கொடூரமாக கொலை..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies