BIG STORIES
இந்தியாவைத் தாக்கிய பாகிஸ்தானுக்கு ஏமாற்றம்.. வீழ்த்தப்பட்ட துருக்கியின் சோன்கர் ட்ரோன்கள்..
May 10, 2025 03:13 AM
2032
இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் பயன்படுத்தியவை துருக்கியின் சோங்கர் என்ற ட்ரோன்கள் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
துருக்கி தலைநகரான அங்காராவைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு நிறுவனமான அசிஸ்கார்டு வடிவமைத்து தயாரித்த சோங்கர் ட்ரோன்கள் கடந்த 2020ம் ஆண்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
அதன் பின்னர் பாகிஸ்தான் இந்த ட்ரோன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியது. பஹல்காம் பயங்கரவாத படுகொலைக்குப் பிறகு ஏப்ரல் 27 அன்று ஆறு துருக்கிய C-130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தானில் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
எனவே அந்த நாளில் ஏராளமான சோங்கர் ட்ரோன்களை பாகிஸ்தான் இறக்குமதி செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 45 கிலோ எடை கொண்ட சோன்கர் ட்ரோன்களை 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்து இயக்கமுடியும்.
இந்த ட்ரோனை பகல் மற்றும் இரவு நேர ராணுவ நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும். மற்ற ட்ரோன்களைப் போல் அல்லாமல் ரிமோட் கண்ட்ரோலின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்து சேரும் வகையில் சோன்கர் ட்ரோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ராணுவ வீரர்களுக்கு பதில் சிறிய குண்டுகளை வீசுவதற்கு சோன்கர் டிரோன்களைப் பயன்படுத்தலாம் என்பதும், தாக்குதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ஒரு சோன்கர் டிரோன் மூலம் அதிகபட்சமாக இரண்டு குண்டுகளை வீச முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலக்குகளை துல்லியமாகக் கண்டறிந்து அழிக்கும் திறன்கொண்ட சோங்கர் ட்ரோன்கள், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டுள்ளன.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu