உலகம்
900 முறை நில அதிர்வு.. பயம், தூக்கமின்மையால் அவதிப்படும் மக்கள்
Jul 03, 2025 09:29 AM
68
900 முறை நில அதிர்வு.. பயம், தூக்கமின்மையால் அவதிப்படும் மக்கள்
ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள டொகோரா தீவுப் பகுதியில், கடந்த இரு வாரங்களில் 900 முறைக்கு மேல், நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பயம் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
நில அதிர்வால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும், இந்த அதிர்வுகள் எப்போது நிற்கும் என்பதை கணிக்க முடியவில்லை என ஜப்பான் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வலுவான நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளதால், எந்த நேரத்திலும் வெளியேற வேண்டிய தயார் நிலையில் இருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 23-ஆம் தேதி மட்டும் 183 முறை நில அதிர்வு உணரப்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu