BIG STORIES
நம்ம ஊரு கோவிலில் சைனா பாம்பு பிரசாதம்.. பதறிப்போன பக்தர்கள்..! சாதத்தில் எட்டிப்பார்த்த வாலு..!
May 07, 2025 01:46 AM
3295
நம்ம ஊரு கோவிலில் சைனா பாம்பு பிரசாதம்.. பதறிப்போன பக்தர்கள்..! சாதத்தில் எட்டிப்பார்த்த வாலு..!
ஒசூர் மலைக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தில் உயிரிழந்த பாம்பு குட்டி இருந்ததை கண்டு பக்தர்கள் பதறி போயினர். புளி சாதம், பாம்பு சாதமான பின்னணி குறித்து அறிய உணவு பாதுகாப்புத்துறையினர் நேரில் சோதனையிட்டு உணவு மாதிரிகளை எடுத்து ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்
ஒசூரில் பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்
பக்தர்களுக்கு கோவில் வளாகத்திலேயே கட்டணம் செலுத்தி பிரசாதமாக புளியோதரை, தயிர்சாதம் ஆகியவை பெற்றுக்கொள்ள பிரசாத சென்டரும் உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த மதனிகா என்கிற பக்தர், பிரசாதம் வாங்கியபோது புளி சாதத்தில் வால் போல காணப்பட்டதால் பின்னர் முழுமையாக எடுத்தபோது விஷத்தன்மை கொண்ட பாம்புக்குட்டி இறந்து கிடந்ததைக் கண்டு பதறிப்போனார்
இதுகுறித்து கேட்டபோது பிரசாதம் விற்கும் நபர் அலட்சியமாக பதில் கூறியதால் பக்தர்கள் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினர் மலைக்கோவிலில் பிரசாத சென்டரில் சோதனையிட்டனர்.. பக்தர்களுக்கு வழங்க இருந்த பிரசாத மாதிரிகளை ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
பாம்பு குட்டி எண்ணெயில் பொறிந்த நிலையில் விரைப்பாக காணப்பட்டதால், புளி சாதத்தை தாளிக்கும் போது அதற்குள் பாம்பு குட்டி விழுந்திருக்கலாம் என்றும் இதனை கண்டு கொள்ளாமல் மாஸ்டர், தாளிசத்தை, சாதத்துடன் கலந்து விற்பனைக்கு எடுத்து வந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பக்தரிடம் இருந்து புகார் பெற்ற உடனே பிரசாதம் விற்காத வகையில் பறிமுதல் செய்யப்பட்டு, கடை மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்த கோவில் செயல் அலுவலர் சாமிதுரை , அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்
மட்டன் குழம்பில் தேரை, தண்ணீரில் பல்லி வரிசையில் புளி சாதத்தில் பொறிச்ச பாம்பு குட்டி கிடந்த இந்த சம்பவம் ஓட்டல் ஓட்டலாக தேடிச்சென்று ருசி பார்க்கும் உணவு பிரியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu