RECENT NEWS

10 அணுகுண்டு தயாரிக்கத் தேவையான 400 கிலோ யுரேனியம் பதுக்கலா?

BIG STORIES

வங்கதேச நாட்டவருக்கு வீட்டுக்கடன் கொடுத்து 7 வீடுகளுக்கும் சீல் வைப்பு..! உஷாரான போலீஸ் ஆக்ஷன்..

May 02, 2025 04:21 PM

1954

வங்கதேச நாட்டவருக்கு வீட்டுக்கடன் கொடுத்து 7 வீடுகளுக்கும் சீல் வைப்பு..! உஷாரான போலீஸ் ஆக்ஷன்..

வங்கதேச நாட்டவருக்கு வீட்டுக்கடன் கொடுத்து 7 வீடுகளுக்கும் சீல் வைப்பு..! உஷாரான போலீஸ் ஆக்ஷன்..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூரில் நீதிமன்ற உத்தரவு பெற்று, 7 வீடுகளுக்கு சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனம் சீல்வைத்த நிலையில், சீலை உடைத்து வீட்டிற்குள் உள்ளே புகுந்த வீட்டு உரிமையாளர், வங்கதேச நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தன்னுடைய 7 வீடுகளுக்கும் சோழ மண்டலம் பைனான்ஸ் அதிகாரிகள் சீல்வைத்து விட்டதாக.. தமிழை தட்டு தடுமாறி பேசும்போதே பலருக்கும் இவர் எந்த ஊரை சேர்ந்தவர் ?என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்திருக்கின்றது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஏ நகரில் வசித்து வந்த பனியன் நிறுவன ஊழியர் சயன். இவர் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து கோவை சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்தில் 42 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.

இடையில் கடனுக்கான தவணை தொகையை சரியாக செலுத்தவில்லை எனக்கூறி நீதிமன்ற உத்தரவு பெற்று சாயனின் வீடு, கடன் வாங்கி கட்டிய 6 வீடுகள் என மொத்தம் 7 வீடுகளுக்கும் நிதி நிறுவனம் சீல் வைத்தது. நள்ளிரவில் 3 வீடுகளின் சீலை உடைத்து சயன் மற்றும் வாடகைக்கு இருந்தவர்கள் குடும்பத்துடன் மீண்டும் குடியேறியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டின் சீலை உடைத்து அத்துமீறி உள்ளே சென்ற புகாரில் வீட்டு உரிமையாளர் சயனை, பல்லடம் டி.எஸ்.பி அழைத்து விசாரித்தார்.

விசாரணையில் சொந்த ஊர் எது என்று விசாரித்த போது முன்னுக்கு பின் முரனாக பேசிய சயன் ஒரு கட்டத்தில் தான் 25 வருடங்களுக்கு முன்பு திருட்டுத்தனமாக மேற்கு வங்கம் வழியாக இந்தியாவிற்குள் புகுந்து, திருப்பூரில் டெயிலர் வேலைக்கு வந்ததை ஒப்புக் கொண்டார்.

ஆரம்பத்தில் பனியன் நிறுவனத்தில் டெயிலராக வேலை பார்த்து வந்த சயன், தன்னை போலவே நூற்றுக்கணக்கான நபர்களை டெயிலர் பணிக்கு வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு அழைத்து வரும் மேன் பவர் ஏஜென்டாகவும் இருந்ததால் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.

இந்த நிலையில் பணியன் நிறுவனத்தில் வேலைப்பார்த்த கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு கரைப்புதூரில் சொந்தமாக வீடுக்கட்டி குடியேறியதாக சொல்லப்படுகின்றது.

தமிழக அரசின் ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, இந்தியன் பாஸ்போர்ட் உள்ளிட்டவை வைத்துள்ள சயனிடம் இவை எல்லாம் எப்படி பெற்றார் ? என்று போலீசார் விசாரித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கேட்டதை கொடுத்ததால் எல்லா ஆவணங்களும் தனக்கு கிடைத்ததாக சயன் தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக 15 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் இந்திய குடியுரிமையை மட்டும் தன்னால் வாங்க இயலவில்லை என்றும் சயன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சட்ட விரோத குடியேற்ற சட்டப்பிரிவின் கீழ் சயனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக போலீஸ் விசாரணைக்கு சென்றால் மாட்டிக் கொள்வோம் என்பதால் நிதி நிறுவனம் தனது வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்து சீல் வைத்த போது கூட சயன், போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் மவுனமாக இருந்ததாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் எந்த அடிப்படையில் சயனுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது என்பது குறித்தும், வங்கதேச நாட்டில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியுள்ள சயனுக்கு பல்வேறு ஆவணங்கள் வழங்கப்பட்டது குறித்தும் விரிவாக விசாரிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவவீரர்..! மகள்களின் குற்றச்சாட்டு என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies