முகப்பு
உண்டியலில் மாட்டிய கை... விடிய விடிய காத்திருப்பு... இவ்வளவும் ரூ.500-க்கு தான்
Apr 28, 2025 04:23 AM
823
மாட்டிகினாரு.. மாட்டிகினாரு.. ஒருத்தரு... திருட வந்த இடத்தில் உண்டியலில் மாட்டிய கை
திருடனுக்கு தேள் கொட்டிய கதையை இதுவரையில் எழுத்து வடிவில் படித்திருப்போம், ஆனால், நேரில் பார்த்திருக்கிறோமா..?. அப்படியொரு சம்பவம் தான் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சேசம்பட்டியில் நடந்துள்ளது.
கோயில் உண்டியல் முன்பு காவலுக்கு இருப்பது போல அமர்ந்திருக்கும் இவர் தான் அந்த தேள் கொட்டப்பட்ட நிஜ திருடன்.
சேசம்பட்டி கிராமத்தில் வயல்வெளியில் சிறிய அளவில் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் உண்டியல் முன்பு ஒருவர் அமர்ந்திருப்பதையும் அவரது இடது கை உண்டியலின் உள்ளே சிக்கி வெளியே எடுக்க முடியாமல் திணறுவதையும் கண்டனர்.
திருடன் ஒருவன் சிக்கிக் கொண்டான் என்ற தகவல் அறிந்ததும் அப்பகுதியினர் அங்கு திரண்டு வந்தனர். விசாரணையில், அவர் அருகிலுள்ள பாகலஅள்ளியைச் சேர்ந்த தங்கராஜ் என்பது தெரிய வந்தது. முயல் பிடிப்பதற்காக வந்ததாகவும், இரும்பு உண்டியல் தனியாக இருந்ததால் அதிலுள்ள காணிக்கை பணத்தை எடுப்பதற்காக கையை விட்ட போது சிக்கிக் கொண்டதாக தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இரவு சுமார் 7 மணியளவில் கோயில் அருகே வந்த தான் ஆள்நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து உண்டியலில் கை விட்டதாகவும், விட்ட கையை வெளியே எடுக்க முடியாததால் அதே இடத்தில் விடிய விடிய அமர்ந்திருந்ததாக தங்கராஜ் தெரிவித்தார்.
இதனையடுத்து, அதியமான் கோட்டை போலீஸாருக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். அவர்கள், தீயணைப்பு துறையினரை வரவழைத்து உண்டியலை இயந்திரம் மூலமாக வெட்டி எடுத்து தங்கராஜின் கையை மீட்டனர்.
உண்டியலில் மொத்தமே 500 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், இதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற கதையாக விடிய விடிய காத்திருந்த தங்கராஜை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu