குறைந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா..?
Aug 11, 2025
குறைந்தது தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா..?
Aug 11, 2025
மாமியார் கழுத்தை நெறித்துக் கொலை செய்த மருமகள்
Aug 11, 2025
முகப்பு
டிவி ரிமோட்டால் பறிப்போன சிறுமி உயிர்... டெல்லியை உலுக்கிய சம்பவம்!
Apr 12, 2025 10:46 AM
140
டிவி ரிமோட்டால் பறிப்போன சிறுமி உயிர்...
டெல்லியில் டிவி ரிமோட் கேட்டதற்காக தனது நண்பனின் 7வயது மகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள ஸ்வரூப் நகரில் ஒரு வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த 7வயது சிறுமி, திடீரென ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார். அவரை மீட்ட சிறுமியின் பெற்றோர் உடனே மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட அதிர்ச்சியில் உறைந்த சிறுமியின் பெற்றோர், வீட்டில் இருந்த சிறுமி எப்படி உயிரிழந்தார் என தெரியாமல் கதறி அழுந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியின் இறப்பு குறித்து விசாரணைய தொடங்கினர். சிறுமி இறந்த அன்று யார் யார் அவரின் வீட்டிற்கு வந்தார்கள்? என்ன நடந்தது ? என சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்திடம் விசாரித்துவந்துள்ளனர். அதைத்தொடர்ந்து சிறுமியின் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியுடைய தந்தையின் நண்பரான ரஞ்சித் சம்பவத்தன்று இரவு வீட்டிற்குள் வந்து, பின் வெளியே சென்றது, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, ரஞ்சித்திடம் தனியாக விசாரணை தொடங்கிய போலீசார் அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
சிறுமியின் தந்தையும், ரஞ்சித்தும் நீண்ட காலமாகவே நண்பர்களாக இருந்துவருகின்றனர். இதனால் சிறுமியின் வீட்டிற்கு ரஞ்சித் அடிக்கடி வருவது, உணவு சாப்பிடுவது, டிவி பார்பது என சகஜமாகவே இருந்திருக்கிறார். இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சென்று மது அருந்துவதும் உண்டும்.
சம்பவத்தன்று, ரஞ்சித், சிறுமியின் தந்தையுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ரஞ்சித் தான் சென்று டிவியில் படம் பார்க்க போவதாக கூறி கிளம்பி இருக்கிறார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமி, டிவியில் நிகழ்ச்சி ஒன்றை பார்த்துவந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்குள் போன ரஞ்சித் டிவி ரிமோட்டை சிறுமியின் கையில் இருந்து பிடிங்கி, தனக்கு விருப்பமான சேனலை மாற்றி பார்த்திருக்கிறார். அப்போது சிறுமி தனக்கு இது பிடிக்கவில்லை, அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டுமென டிவி ரீமோட்டை கேட்டிருக்கிறார். அப்போது ரஞ்சித் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் சிறுமி, மீண்டும், மீண்டும் ரஞ்சித்திடம் ரிமோட் கொடுக்கும்படி கேட்க, இதனால் ஆந்திரமடைந்த ரஞ்சித் சிறுமியை அறைந்திருக்கிறார். இதனால் காயம் ஏற்பட்டு சிறுமியின் கண்ணத்தில் இருந்து ரத்தம் வந்துள்ளது.
இதனால் சிறுமி, எங்கே தான் அடித்ததை வெளியே சொல்லிவிடுவாளோ என பயந்து போன ரஞ்சித், சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார். பின்னர் ஏதும் தெரியாதபோல் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். ரஞ்சித் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்துபோவது, அக்கம்பக்கத்தினருக்குத் தெரியும் என்பதால், ரஞ்சித் வீட்டை விட்டு வெளியேறும்போது யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் எழவில்லை என கூறப்படுகிறது.
அதையெடுத்து சிறுமி இறந்துவிட்டார் என சிறுமியின் பெற்றோர் அழுது கொண்டிருக்கும் போதும் கூட ஏதும் தெரியாதபோல் ரஞ்சித், நின்றுகொண்டிருந்துள்ளார். பின்னர் சிசிடிவி காட்சிகளை கொண்டே போலீசாரிடம், ரஞ்சித் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் ரஞ்சித்தை கைதுசெய்த போலீசார், சிறுமியின் தந்தையிடம் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.
சாதாரண டிவி ரிமோட்டிற்காக 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu