RECENT NEWS

வீட்டின் பின்புற தொட்டியில் சடலமாக மிதந்த 2 வயது குழந்தை.. கோவையில் அதிர்ச்சி

வீட்டின் பின்புற தொட்டியில் சடலமாக மிதந்த 2 வயது குழந்தை.. கோவையில் அதிர்ச்சி

Mar 18, 2025

வீட்டின் பின்புற தொட்டியில் சடலமாக மிதந்த 2 வயது குழந்தை.. கோவையில் அதிர்ச்சி

வீட்டின் பின்புற தொட்டியில் சடலமாக மிதந்த 2 வயது குழந்தை.. கோவையில் அதிர்ச்சி

Mar 18, 2025

முகப்பு

இன்ஸ்டா காதலியுடன் ஏலகிரியில் டும்..டும்.. டும் ஊட்டியில் தேனிலவு எஸ்கேப் வீரர் சிக்கியது எப்படி

Mar 05, 2025 05:47 AM

531

இன்ஸ்டா காதலியுடன் ஏலகிரியில் டும்..டும்.. டும் 
ஊட்டியில் தேனிலவு எஸ்கேப் வீரர் சிக்கியது எப்படி

இன்ஸ்டா காதலியுடன் ஏலகிரியில் டும்..டும்.. டும் ஊட்டியில் தேனிலவு எஸ்கேப் வீரர் சிக்கியது எப்படி

கிருஷ்ணகிரி அருகே இன்ஸ்டாகிராமில் காதலித்த பெண்ணை, திருமணம் செய்த அக்னிபாத் ராணுவவீரர் ஒருவர், ஊட்டியில் 5 நாட்கள் தேனிலவு கொண்டாடி விட்டு காதல் மனைவியை ஏமாற்றி விட்டு தப்பிக்க முயன்ற போது கையும் களவுமாக சிக்கினார்
இன்ஸ்டா கிராம காதலியை, திருட்டுத்தனமாக திருமணம் செய்ததோடு... 5 நாட்கள் தேனிலவும் கொண்டாடிய பின் காதல் மனைவியை மீண்டும் வீட்டில் விட்டு விட்டு தப்ப முயன்ற பெண் வீட்டாரிடம் பங்கமாக சிக்கிய பட்டாளத்து மாப்பிள்ளை பெரியண்ணன் இவர் தான்..

கையிலே பையுடன்.. சிரித்த முகத்துடன்.. காதலனை பிரிந்து காரில் இருந்து... பவ்யமாக இறங்கும் இவங்க தான் இன்ஸ்டா காதலனை நம்பி வீட்டை விட்டு ரன்னானவர் ..

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். அக்னிபாத் ராணுவவீரராக உள்ள இவர் மத்தியபிரதேச மாநிலம் ஜெபல்பூரில் பணியில் இருந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகமான போச்சம்பள்ளி வடமலம்பட்டியை சேர்ந்த பெண்ணூடன் காதல் மலர்ந்துள்ளது.

தினமும் இன்ஸ்டாகிராமில் காதலியுடன் மெய்மறந்து சாட்டிங் செய்து வந்த பெரியண்ணனுக்கு காதலியை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தங்கள் மகள் இன்ஸ்டாகிராமில் மூழ்கி உருகி போவதை கண்ட அவரது பெற்றோர் வேறு ஒரு இடத்தில் வரன் பார்த்துள்ளனர்.

தனக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்து விட்டதாக அப் பெண் பெரியண்ணனிடம், தெரிவித்துள்ளார். இதையடுத்து 15 நாட்கள் அவசர விடுப்பு போட்டு வந்த பெரியண்ணன், 28ந்தேதி வீட்டிற்கு தெரியாமல் ஏலகிரிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள கோவிலில் வைத்து அப் பெண்ணின் கழுத்தில் மஞ்சள் கயிற்றால் தாலி கட்டிய பெரியண்ணன், அங்கிருந்து ஊட்டிக்கு அழைத்துச்சென்று 5 நாட்கள் ஹனிமூன் கொண்டாடியதாக கூறப்படுகின்றது.

பின்னர் சம்பவத்தன்று காதல் மனைவியுடன் தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில் அப் பெண்ணை பெரியண்ணனின் பெற்றோர் ஏற்றுக் கொள்ள மறுத்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து அப் பெண்ணிடம் தனக்கு விடுமுறை விரைவாக முடிய இருப்பதால் அடுத்த விடுமுறையில் மீண்டும் சந்திக்கலாம் அதுவரை உனது வீட்டில் இரு... என்று சொல்லி கம்பி நீட்ட திட்டமிட்டார் பெரியண்ணன். அவரது கழுத்தில் கட்டிய தாலியையும் கழற்றி விட்டு நல்ல பிள்ளையாக அவரை வீட்டில் விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது பெண் வீட்டார் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தங்கள் மகளை திருமணம் செய்து 5 நாட்கள் குடித்தனம் நடத்தி விட்டு தப்பிக்க பார்ப்பதாக பெரியண்ணன் மீது பெண் வீட்டார் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விட்டுச்சென்றால் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிய வேண்டிவரும் என்று போலீசார் எச்சரித்ததால், தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வேலை போய்விடும் என்று அஞ்சிய பெரியண்ணன் குடும்பத்தினர், தங்கள் வீட்டுக்கு அப்பெண்ணை மருமகளாக அழைத்துச் செல்ல சம்மதித்தனர்.

பெற்றோர் முன்பு மீண்டும் தாலி கட்டிய பெரியண்ணன், தான் அடுத்த விடுமுறையில் ஊரை கூட்டி திருமணம் செய்துகொள்வதாக காவல் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டுச்சென்றார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மன்மத வக்கீலுக்கு மகத்தான மாவுக்கட்டு
இவரு தான் பூச்சாண்டியாம்..!..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies