இந்தியா
தலைநகரில் அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கத்தால் அச்சம்
Feb 17, 2025 05:46 AM
83
தலைநகரில் அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கத்தால் அச்சம்
தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே தஞ்சமடைந்தனர்.
ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் அச்சமடைந்ததாக தெரிவித்தனர். நிலநடுக்கத்தின்போது பயங்கர சத்தம் கேட்டதாகவும் டெல்லிவாசிகள் தெரிவித்துள்ளனர். நில அதிர்வின்போது சிலர் தங்கள் வீடுகளில் பொருட்கள் கீழே விழுந்ததையும் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.
டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி டெல்லியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் மட்டுமே இருந்ததாக புவியியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆழமற்ற நிலநடுக்கங்கள், ஆழமான நிலநடுக்கங்களை விட மிகவும் தீவிரமானவை என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu