RECENT NEWS

முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா? திருமாவளவன் கேள்வி

BIG STORIES

"கண்ட கண்ட வீடியோ பார்த்து உடலளவில் சித்ரவதை".. கதறி துடித்த ரிதன்யாவின் தாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!

Jul 03, 2025 01:31 PM

272

"கண்ட கண்ட வீடியோ பார்த்து உடலளவில் சித்ரவதை".. கதறி துடித்த ரிதன்யாவின் தாய்..

"நீ இல்லாம இனி நான் என்ன பண்ணுவேன், உன் அப்பா என்னடி பண்ணுவாரு" என இறந்த மகளின் போட்டோவை தாய் கட்டியணைத்து கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்க வைத்துள்ளன.

திருப்பூர் மாவட்டம் சேயூரில் கடந்த சனிக்கிழமையன்று ரிதன்யா என்ற பெண் கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதாக காரிலேயே விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்பாக கணவர், மாமனார், மாமியார் தன்னை எவ்வாறு கொடுமைப்படுத்தினர் என்பது குறித்து ரிதன்யா அழுது கதறியவாறு தனது தந்தைக்கு வாட்சப்பில் அனுப்பிய ஆடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரிதன்யாவின் வழக்கில் ரிதன்யா கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மாமியார் சித்ராதேவி தலைமறைவகியுள்ளார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

மகளின் இறப்பு குறித்து பேசிய ரிதன்யாவின் தாயார் ஜெயசுதா, ஒரே பெண் என்று செல்லமாக வளர்ந்ததாகவும், அதன் காரணமாக நல்ல குடும்பம் என நம்பி கோடி கணக்கில் நகை, கார் என பணம் செலவழித்து திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ரிதன்யாவின் கணவர் கவின்குமார் சைக்கோ என்றும், தேவையற்ற வீடியோக்களை பார்த்து அதே போன்று தனது மகளை உடல்ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கவின்குமார் ஐஏஎஸ் தேர்வு எழுதப் போவதாக கூறி ஏமாற்றியது தெரிந்தும் ரிதன்யா கவின்குமாரை காட்டி கொடுக்காமல் இருந்ததாகவும், திருமணம் முடிந்த இரு வாரங்களிலேயே தொழில் துவங்க தங்களிடம் பணம் கேட்டதாகவும், தாங்கள் ஆறு மாதம் பொறுமையாக இருந்து பார்த்து கொள்ளலாம் என்று கூறியதால் ரிதன்யாவை திருப்பி தங்கள் வீட்டிற்கே அனுப்பி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்கள் மகளை பறிகொடுத்த அதே வேளையில், கைதான குற்றவாளிகளுக்கு வித விதமாக உணவு சென்று கொண்டிருப்பதாகவும், மகளின் மாமியார் இன்னும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருப்பதாகவும் , அவரை உடனே கைது செய்து மகளின் இறப்பிற்கு நீதி வழங்குமாறும் ரிதன்யாவின் தாயார் வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும் இது குறித்து செய்தியாளரிடம் பேசிய ரிதன்யாவின் சித்தப்பா, வழக்கை விசாரிப்பதில் அதிகாரிகளுக்கு அரசியல் இடையூறு கொடுக்கப்படுகின்ற காரணத்தால், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மெக்டொனால்டு பர்கரில் நெழிந்த புழுக்களால் அதிர்ச்சி.. அபராதம் இல்லை.. ஆய்வு மட்டுமே..! அதிகாரிகள் பாரபட்சமான நடவடிக்கை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies