RECENT NEWS

15 வயது பள்ளி மாணவனை பிடித்து சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்திய போலீசார்

15 வயது பள்ளி மாணவனை பிடித்து சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்திய போலீசார்

Feb 12, 2025

15 வயது பள்ளி மாணவனை பிடித்து சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்திய போலீசார்

15 வயது பள்ளி மாணவனை பிடித்து சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்திய போலீசார்

Feb 12, 2025

தமிழ்நாடு

சட்டவிரோத கனிமவளக் கொள்ளை கலெக்டர் மற்றும் எஸ்.பியிடம் மனு... அனாதையான சமூக ஆர்வலர் குடும்பம்..! இந்த கொலையில் யார் யாருக்கு தொடர்பு

Jan 22, 2025 01:31 AM

22

சட்டவிரோத கனிமவளக் கொள்ளை கலெக்டர் மற்றும் எஸ்.பியிடம் மனு... அனாதையான சமூக ஆர்வலர் குடும்பம்..! இந்த கொலையில் யார் யாருக்கு தொடர்பு

அனாதையான சமூக ஆர்வலர் குடும்பம்..! இந்த கொலையில் யார் யாருக்கு தொடர்பு

'எங்க ஊர்ல சட்ட விரோதமாக கல்குவாரி செயல்பட்டு வருகின்றது' என்று ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரிடமும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் தொடர்ச்சியாக புகார் மனு அளித்தவர் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி . அதிமுகவின் முன்னாள் கவுன்சிலரான இவர் கடந்த வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கி பலியானதாக கூறப்பட்டது.

தொழுகை முடிந்து வீடு திரும்பிய ஜகுபர் அலி மீது மினி லாரி பயங்கரமாக மோதியதாக தெரிவித்த போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்த நிலையில் அவரது மனைவி மரியம் அதனது கணவர் கனிம வளக்கொள்ளையை எதிர்த்து போராடியதால் ஆர்.ஆர். க்ரசர் பங்குதாரர்களான ராசு , ராமையா, உள்ளிட்டோர் லாரி ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீசில் புகார் அளித்தார்.



தனது புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தனது கணவரின் சடலத்தை பெறுவேன் என்றும் அவர் தெரிவித்ததால் சட்ட விரோத கல் குவாரி பங்குதாரர்களின் ஒருவரான ராசு அவரது மகன் தினேஷ்குமார், கார் மெக்கானிக் முருகானந்தம், கூலிப்படை ஓட்டுனர் காசி நாதன் ஆகிய 4 பேரை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட நிர்வாகத்துக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் தொடர்ச்சியாக புகார் அளித்தது மட்டுமல்லாமல், திருமயத்தில் போராட்டத்துக்கும் ஏற்பாடு செய்ததால், ஜகுபலி அலியை உடனடியாக தீர்த்துக் கட்ட ராசுவும், ராமையாவும் சதி திட்டம் வகுத்தது விசாரணையில் தெரியவந்தது. அதன்படி பரமகுடியில் இருந்து வந்து கடந்த 20 வருடங்களாக த்னக்கள் பகுதியில் ஒர்க் ஷாப் நடத்தி வரும் முருகானந்தம் மூலம் ராமநாதபுரத்தில் இருந்து காசிநாதன் என்பரை கூலி பேசி வரவழைத்து அவரிடம் 407 மினி லாரியை கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகின்றது.

பள்ளிவாசலில் தொழுகை முடிந்து ஜகுபர் அலி வெளியே வரும் வரை காத்திருந்து, நோட்டமிட்டு அவரை மினி லாரியால் அடித்து தூக்கியதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில் சட்ட விரோத கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்த அந்த நபர் யார் ? என்று கேள்வி எழுப்பி உள்ள ஜாகுபர் அலியின் மனைவி மரியம், இந்த கொலையின் பின்னணியில் இருக்கும் மற்ற நபர்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு கோள் விடுத்துள்ளார்



கொலைக்கு சதித்திட்டம் வகுத்துக் கொடுத்த மற்றொரு பங்குதாரர் ராமையாவை தேடி வரும் போலீசார் , அவரது பின்னணியில் இருப்பது யார் ? என்பதை அறியவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இவன்லாம் எங்க ஐ.ஏ.எஸ் ஆகப்போறான்...” காதலியின் மம்மியை கொன்ற காதலன்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News