நமது எதிர்காலத்தை நாமே கட்டமைப்போம்.. குளோபல் சவுத் மாநாட்டின் இறுதி நாளில் பிரதமர் மோடி உரை

0 620

நமது எதிர்காலத்தை நாமே கட்டமைப்போம், நமது தலைவிதியை நாமே எழுதுவோம் என்று குளோபல்சவுத் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாநாட்டின் இறுதி நாளான நேற்று அவர் உரையாற்றினார். அனைவருக்குமான ஒரே எதிர்காலம் என்ற இலக்குடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வறுமை ஒழிப்பு நிலம் பாதுகாப்பு போன்ற இலக்குகளுடன் நீடித்த வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என்றும் சைபர் குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்றும் கூறிய பிரதமர் மோடி நமது தொழில்நுட்பங்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments