நேபாளத்தில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0 1127

நேபாளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 69 பேர் உயிரிழந்தனர்.

ஜஜார்கோட் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாகவும், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உண்டானதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு நிமிடத்திற்கும் மேலாக பலத்த அதிர்வுகளுடன் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஜஜார்கோட் மாவட்டத்தில் 26 பேரும், ருக்கும் மாவட்டத்தில் 28 பேரும் உயிரிழந்தனர்.

இடிபாடுகளுக்கு இடையே ஏராளமானோர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

டெல்லி, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. இதனால் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments