தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு

ஹரியானாவின் ஃபரிதாபாத்தை மையமாக கொண்டு 3 புள்ளி 1 என்ற ரிக்டர் அளவில் மாலை 4 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது.
இதன் காரணமாக டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசத்தின் நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
நில அதிர்வைத் தொடர்ந்து மக்கள் உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளியேறினர். லேசான அளவில் நில அதிர்வுகள் ஏற்பட்டதால் கட்டிடங்களுக்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 3ஆம் தேதியன்று டெல்லி மற்றும் வட மாநிலங்களில் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments