நாட்டு மக்கள் அனைவரும் பொது இடங்களில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுமாறு பிரதமர் மோடி அழைப்பு..!

0 1021

அக்டோபர் முதல் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஒருமணி நேரத்துக்கு பொது இடங்களில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சந்தைகள், ரயில்வே தண்டவாளங்கள், கடற்கரைகள், பூங்காக்கள், ஏரிகள், ஆறுகள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பல்வேறு பொது இடங்களில் குவியல் குவியலாகக் குப்பைகள் குவிந்துக் கிடக்கின்றன.

சுத்தமான இந்தியா திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தேசியஅளவில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 1ம் தேதி ஒன்றுபடுமாறு மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நாடு முழுவதும் இதனை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments