கடலூரில் திருட வந்த இடத்தில் வாகனம் ஓட்டத் தெரியாமல் மாட்டிக் கொண்ட திருடன்

0 8721

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருட வந்த இடத்தில் வாகனம் ஓட்ட தெரியாமல் மாட்டிக்கொண்ட திருடன் சிசிடிவி உதவியால் பொதுமக்களிடம் பிடிபட்டான்.

கோழியூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு வேலி கம்பி மற்றும் சிமெண்ட் கற்கள் விற்பனை செய்யும் கடையில் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை விக்னேஷ் என்பவன் திருட முயன்றுள்ளான்.

ஆனால் அவனுக்கு வண்டி ஓட்டத் தெரியாத காரணத்தால் அருகில் இருந்த கம்பி வேலியில் இடித்ததால் வாகனம் அங்கேயே நின்று விட்டது.இந்நிலையில் கடை உரிமையாளர் வந்து பார்த்த போது வாகனம் திருடப்பட்டு இருப்பது கண்டு சிசிடிவியை ஆய்வு செய்தார்.

அப்போது வெளியே நின்று கொண்டிருந்த இளைஞரின் ஆடையும், சிசிடிவியில் உள்ள இளைஞனின் ஆடையும் ஒன்றாக இருப்பதை கண்டு மக்கள் உதவியுடன் அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments