யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் - முதலமைச்சர்

0 1162

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறைக்கு ஆளும்கட்சியாக இருந்த போது எதிர்ப்பு தெரிவித்த அதிமுக தற்போது ஆதரவு அளிப்பதாகவும், அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதிமுகவும்தான் பலிகடா ஆகும் என்றார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்றி, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியைக் கலைக்கப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர், ஏதாவது மாநிலத்தில் மெஜாரிட்டியை இழந்தால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும்வரை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவீர்களா என்றும் வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments