B-20 வர்த்தக உச்சி மாநாட்டில் இன்று பிரதமர் மோடி பங்கேற்பு...!

0 687

பிரதமர் மோடி இன்று நண்பகல் 12 மணிக்கு டெல்லியில் நடைபெறும் பி 20 உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளார்.

55 நாடுகளைச் சேர்ந்த 1500 தொழில் துறை பிரதிநிதிகளுடன் பி 20 வர்த்தக உச்சி மாநாடு கடந்த 25ம் தேதி தொடங்கியது.

தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் பங்குபெறும் இந்த மாநாட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலை குறித்து மோடி உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி 20 என்பது ஜி 20 நாடுகளின் பொருளாதார அமைப்பாகும். ஜி 20க்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் சர்வதேச அளவில் தொழில் வளர்ச்சிக்காக இந்த வர்த்தக அமைப்பு 54 பரிந்துரைகளை முன்வைத்து 172 கொள்கைகளை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments