காவல்துறைக்கு அடங்காத அட்டகாச இளைஞர்கள்... வண்டலூர் -மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் தொடரும் பைக் வீலிங்

0 1151

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் - வண்டலூர் இடையிலான வெளிவட்டச்சாலையில், பாதுகாப்பற்ற முறையில் பைக் வீலிங் செய்யும் இளைஞர்களின் அட்டகாசம் தற்போதும் நீடிக்கிறது .

இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் காணப்படாததால் சில துடுக்கு இளைஞர்கள் இதனை தங்களது விளையாட்டு களமாக மாற்றி உள்ளனர்.

இவர்கள் வீலிங் செய்வதை நேரில் கண்டு கண்டிக்கும் காவல்துறை அதிகாரிகளின் முன்பாகவே வீலிங் செய்து இளைஞர்கள் அட்டகாசம் செய்கின்றனர்.

பெற்றோர்களின் கண்டிப்பு இல்லாத வரை இதுபோன்ற அட்டகாச இளைஞர்களை எவராலும் காப்பாற்ற இயலாது அவர்களின் உயிரை காப்பாற்றவும் முடியாது என்பதே நிதர்சனம் ...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments