"நடப்பாண்டில், இதுவரை, 74 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது.." - மத்திய அரசு...!

0 943

நடப்பாண்டில், இதுவரை, 74 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு சிறைகளில் தவிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறித்து, திமுக எம்.பி. கனிமொழி, மக்களவையில், எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், அதிகபட்சமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், சவுதி அரேபியா கடற்பகுதிகளில், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதாக கூறியுள்ளார்.

இருப்பினும், இந்திய மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் போன்ற தகவல்கள் கிடைத்த உடன், இந்திய தூதரகங்கள் மூலம் மீட்பு நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படுவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments