செப்டம்பர் மாதத்தில் ஏர்பஸ் நிறுவனத்தின் சி 295 முதல் டெலிவரி

0 1032

ஏர்பஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்ட ஒப்பந்தப்படி  முதலாவது C295 விமானம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட உள்ளது.

ஸ்பெயின் நாட்டில் செவில்லா தொழிற்சாலையில் தயாராகி உள்ள விமானம், இந்தியா வந்தடைந்ததும் பரிசோதனைகள் முடிந்தபின் விமானப்படையில் இணைக்கப்படும்.இரண்டாவது விமானம் அடுத்த ஆண்டு மே மாதம் இந்தியா வந்தடையும். இந்திய விமானப்படையை நவீனப்படுத்த 56 விமானங்கள் வாங்கப்படுகின்றன.

இதில் பறக்கும் நிலையில் உள்ள  16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் 22 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments