மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஆயத்தமாகும் எதிர்க்கட்சிகள்.. பெங்களுருவில் திரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்..

0 1740

மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் பெங்களூருவில் ஒன்று கூடியுள்ளனர்.

கடந்த மாதம் பாட்னாவில் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து 2வது கட்டமாக பெங்களுருவில் செவ்வாயன்று கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பெங்களூரு சென்ற சோனியா காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல்காந்தி ஆகியோரை முதலமைச்சர் சித்தராமையா விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் மற்றும் அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்றுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு, முதலமைச்சர் சித்தராமையா இரவு விருந்து அளிக்கிறார். செவ்வாய் நடைபெறும் கூட்டத்தில் மொத்தம் 24 கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு புதிய பெயர் சூட்டுவது உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படாலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments