''90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை...'' - அண்ணாமலை...!

0 1455

மத்திய பா.ஜ.க. அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக முதலமைச்சர் பேசி வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட அண்ணாமலை, ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என கூறியுள்ளார்.

வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று பிரதமர் சொன்னாரே தவிர, அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும் செலுத்துவோம் என அவர் தெரிவிக்கவில்லை என அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments