சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு மீது பிரதமர் மோடி விமர்சனம்... ஊழல் கரைபடிந்த கட்சிகளே ஓர் அணியாக சேர முயற்சி என தாக்கு...!

0 1983

காங்கிரஸ் கட்சிக்கு ஊழலே சித்தாந்தம் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், அம்மாநில காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார்.

சத்தீஸ்கரில் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் மாபியா கூட்டம் பெருகிவிட்டதாகவும் மோடி குற்றம்சாட்டினார். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து சத்தீஸ்கரில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மது விநியோகத்தில் முறைகேடு செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்களே சத்தீஸ்கரில் ஆட்சி செய்வதாகவும் மோடி சாடினார். ஊழல் செய்தவர்களை தப்பிக்க விடமாட்டேன் என்றும் அவர் உறுதிபட கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments