அதிகரித்து வரும் எலிகளின் தொல்லை.. அதை அப்புறப்படுத்த ஆண்டுக்கு ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் சம்பளத்தில் ஆட்கள் தேவை - நியூயார்க் மேயர்

0 1720

அமெரிக்காவில் எலிகளை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் வணிக நிறுவனங்கள், பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை வாடகைக்கு அமர்த்தி எலி வேட்டையாடி வருகின்றன.

வாஷிங்டன் டி.சி., நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் வீடுகள், ரெஸ்டாரண்ட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் எலிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

எலிகளை கொன்று அப்புறப்படுத்த ஆண்டுக்கு ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் சம்பளத்தில் ஆட்கள் தேவை என்று நியூயார்க் மேயர் அறிவிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.

இந்த நிலையில், வாஷிங்டன் நகரிலுள்ள வணிக நிறுவனங்கள், நாய்களையும் பூனைகளையும் வாடகைக்கு அமர்த்தி, எலிகளை வேட்டையாடும் பணியில் இறங்கியுள்ளனர். பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள், எலிகளை விரட்டி, விரட்டி வேட்டையாடி வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments