கார் பார்க்கிங்கில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை மீது கார் ஏறியதில் பரிதாபமாக உயிரிழப்பு...!

0 1648

ஹைதரபாத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை மீது கார் ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் சிலர் ஹைதரபாத்தின் ஹையத் நகரில் தங்கியபடி கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களில் கவிதா என்பவர் தனது 3 வயது மகளை அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங்-கில் தூங்க வைத்துவிட்டு கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தார்.

வீட்டிற்கு காரில் திரும்பிய குடியிருப்புவாசி ஒருவர், தனது பார்க்கிங்-கில் குழந்தை படுத்திருப்பதை கவனிக்காமல் காரை இயக்கியதில் குழந்தை அங்கேயே உயிரிழந்தது. காரை ஓட்டி வந்தவர் யார் என போலீசார் விசாரித்துவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments