சி.பி.ஐ. அமைப்பின் புதிய இயக்குனராக கர்நாடக டி.ஜி.பி. பிரவீன் சூட் நியமனம்

0 1109
சி.பி.ஐ. அமைப்பின் புதிய இயக்குனராக கர்நாடக டி.ஜி.பி. பிரவீன் சூட் நியமனம்

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் புதிய இயக்குனராக கர்நாடக டி.ஜி.பி. பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.பி.ஐ. இயக்குனரான சுபோத் குமாரின் பதவிக்காலம் வரும் 25ஆம் தேதியன்று நிறைவு உள்ளது. இதனால், புதிய இயக்குனரை தேர்வு செய்ய பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆலோசித்தனர்.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அடுத்து, பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குனராக நியமிக்கப்படுவதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு கர்நாடக பேட்ச் பிரிவைச் சேர்ந்த பிரவீன் சூட், அடுத்த 2 ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குனர் பொறுப்பை வகிக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments