விவசாய சங்க நிர்வாகி கொலை வழக்கில் 5 பேர் கைது..!

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர்.பாளையத்தில் விவசாய சங்க நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லால்குடி அருகே உள்ள பி.கே.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். தனியாக வசித்து வந்த இவர் அண்மையில் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சிறுவன் ஒருவன் சரண் அடைந்த நிலையில் தற்போது சணமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்,அறிவழகன் உள்ளிட்ட ஐந்து பேரும்கிராம நிர்வாக அலுவலகத்தில் சரணடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து ஐந்து பேரையும் கிராம நிர்வாக அலுவலர் சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
Comments