பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டாக போராட வேண்டும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 1667

பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் கூட்டாக இணைந்து போராட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் பேசிய அவர், சமூகவலைதளங்கள் மற்றும் மக்களிடம் இருந்து நிதி திரட்டல் உள்ளிட்ட புதிய முறைகளை பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வலுப்பட இந்தியா முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும், பொதுவான சவால்களை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்பான, வளமான பிராந்தியத்தை உறுதிப்படுத்த ஷாங்காய் அமைப்பின் செயல்திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments