சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த இளைஞர்.. உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்..!

தாம்பரம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்துள்ளனர்.
சென்னை அடுத்த தாம்பரம் சிட்லபாக்கத்தை சேர்ந்த பாஸ்கர்- ஜெயந்தி தம்பதிக்கு ஞானகுமரன், கார்த்திகேயன் என இரண்டு மகன்கள் உள்ளனர் இதில் பைக்கில் சென்ற கார்திகேயன். தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் விபத்தில் சிக்கிய அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கடந்த செவ்வாயன்று மூளைச் சாவடைந்தார்.
இந்தநிலையில் மூளை சாவடைந்த கார்த்திகேயனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்து அந்த உறுப்புகளை 12 பேருக்கு தனமாக வழங்கினர்.
Comments