இந்தியாவுக்கு வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

0 1958

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து தெரிவித்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உயரதிகாரி டொனால்ட் லூ, இந்தியா - அமெரிக்கா நல்லுறவிற்கு இந்தாண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் என்றார். மேலும், செப்டம்பரில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை பைடன் எதிர்நோக்கியுள்ளதாகவும், ஜி-20 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, நடப்பாண்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்கா விசா வழங்க உள்ளதாகவும், இதில் மாணவர்கள் மற்றும் ஐ.டி. துறையினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளதாகவும் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments