ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது சேற்றில் கால் சிக்கியதால் பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு..!

0 1370

சேலம் அருகே கன்னங்குறிச்சி ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது சேற்றில் கால் சிக்கியதால் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் அங்குள்ள ஏரிக்கு சென்றனர். ஒரு மாணவருக்கு நீச்சல் தெரியாததால் அவர் கரையில் இருந்துள்ளார்.

பாலாஜி மற்றும் பிரசாந்த் ஆகியோர் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும்போது சேற்றில் கால் சிக்கியதால் அவர்களால் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கியுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய இரண்டு மாணவர்களின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments